இனி
நாட்குறிப்புகளை சீண்ட நேரமிருக்காது;
நடந்தவற்றை சொல்ல தோழி வந்த பின்னே !!!
செல்பேசிக்கு செலவே இருக்காது;
விழியாலேயே பேச வஞ்சி வந்தாயிற்றே !!!
விளக்கெரித்து விலகாது இரவு;
அறைக்குள்ளேயே அமர்ந்திருக்கிறதே நிலவு !!!
கவிதைக்கும் நேரம் இருக்குமோ தெரியாது;
கவிதையே துணையாய் இருக்கும் பொழுது ??!!!
கோடி கோடி வாழ்த்துக்களுடன்
- பிரேம்குமார்