இரண்டரை ஆண்டு பெங்களூர் வாழ்விற்கு பிறகு இதோ மீண்டும் சென்னை வந்தாயிற்று. இந்த இரண்டரை ஆண்டு காலம் என் தமிழ் ஆர்வத்தையும் வயிற்றையும் வளர்த்த பெங்களூருக்கு இப்பதிவு சமர்ப்பணம்
மனதையும் உடலையும்
சில்லிட வைக்கும் பெங்களூரே,
கனவும் கவிதைகளும்
தரும் அழகிகள்வாழ் பெண்களூரே,
பூக்காடுகள் தொலைத்து
கட்டடக்காடுகள் காணும் செங்களூரே,
போய் வருகிறேன்
பிறந்தகம் திரும்பும் உற்சாகம்
உள்ள போதிலும்
பிரிவின் வலி சற்றே
உள்ளத்தின் ஓரத்தில்!
முதன் முதலில் தெரியாத ஓர் ஊரில் வாழ்க்கை, புது வேலை, புது மனிதர்கள் என ஏகப்பட்ட அனுபவங்களை தந்தது பெங்களூர். போக போக பழகி போனாலும், கடைசி வரை ஏனோ பிடிப்பு வரவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், எப்போதும் மனதில் ஓர் நீங்காத இடம் பிடித்துவிட்டது பெங்களூர். அப்படி இப்பதியென்று இப்போது முழுக்க சென்னைவாசி ஆகிவிட்டேன்