மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

இது காதல் காலம் – 10 பெப்ரவரி 27, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 5:00 மு.பகல்

ஒன்றும் பூஜ்யமும் மட்டுமே
அறியுமென் கணிணி
உன்னையும்
நம் காதலையும்
மட்டுமே எழுதும் 
என் கவிதைகள் போல!

 

இது காத‌ல் கால‌ம் – 9 பெப்ரவரி 20, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 7:08 மு.பகல்

மல்லியப்பூ முடியயில‌
மனச‌யும் முடிஞ்சுபுட்டே
சிக்கில்லா சடயோட‌
சிக்கிருச்சே மனசு

சீலயக் கட்டயிலே
சீவனயுங் கட்டிப்புட்டே
க‌லையாத‌ சீல‌க்க‌ட்டில்
க‌லையுதே ம‌ன‌சு

வ‌ள‌வி சிணுங்க‌யில
வ‌ய‌சும் சிணுங்குது
மாட்டுற‌ வ‌ள‌வியூட‌
மாட்டுதே ம‌ன‌சு

சிக்குன மனச
சீராக்கி சேப்பியோ?
கலஞ்ச மனசோட‌
க‌ல‌வ‌ர‌ஞ் செய்வியோ?

மல்லுக்கு நிக்காம
சொல்லொன்னு சொல்லு
ஊரே கேக்க உரக்கவோ இல்ல‌
பக்கமா வந்து பய்யவோ.

 

இது காதல் காலம் – 8 பெப்ரவரி 13, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 7:43 மு.பகல்

காதலின் கையேட்டில்
நம் பெயர்கள்
அக்கம் பக்கத்தில் தான்
இருந்தன‌வாம் இத்தனை நாளும்.
சேர்த்தெழுதும் புணர்ச்சி விதி மட்டும்
இப்போது தான் கற்றதாம்
காதல் குழந்தை

 

இது காதல் காலம் – 7 பெப்ரவரி 13, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 7:43 மு.பகல்

முதலில் ரசிக்கவைத்து
கொஞ்சம் தொட்டு விளையாடி
மெல்ல உள்ளிழுத்து
பின் மொத்தமாய் மூழ்கடித்துவிடும்
கடல்போலவே காதலும்.
கடலுக்கேனும் மும்முறை கருணை
பிறக்குமாம்;
காதலுக்கு?

 

இது காதல் காலம் – 6 பெப்ரவரி 13, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 7:43 மு.பகல்

எத்தனை முயற்சித்தாலும்
உனக்காக ஒரு கவிதை முத்தை
தேடப்போய்
உன் நினைவுக்கடலில்
மூழ்கித்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்

 

இது காதல் காலம் – 5 பெப்ரவரி 10, 2007

கோப்பு வகை: இது காதல் காலம் — பிரேம்குமார் சண்முகமணி @ 12:35 பிற்பகல்

எத்தனையோ
காதல் காலங்களைத் தாண்டியும்
புத்தம் புதிதாய் தான் தெரிகிறது
வானதியும்
நானுக்கெழுதும் கவிதையும்!

 

இது காதல் காலம் – 4 பெப்ரவரி 6, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 7:30 மு.பகல்

கண்டதுமே    வந்தனையோ!  கண்ணசைவில்   வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக்        கணத்தில்தான்   வந்தனையோ!
கட்டழகில்     கிறங்கிப்போய்   கருத்தினில்        வந்தனையோ!
கள்ளமற்ற     கோதையுளம்     கவர்ந்ததாலே    வந்தனையோ!
காதருகே        காரணந்தான்      கதைத்திடுவாய்   காதலே!

 

இது காத‌ல் கால‌ம் ‍- 3 பெப்ரவரி 5, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 12:19 பிற்பகல்

திசைகாட்டிகள்
நிறைந்த பாதைகளிலும்
தொலைந்து போகும் நான்,

மிகச்சரியாக பிரயாணித்து
உனை அடைந்தது

இந்த காதல் பயணத்தில்தான்!

 

இது காத‌ல் கால‌ம் – 2 பெப்ரவரி 2, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 12:22 பிற்பகல்

ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய‌ பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக‌ காத்திருக்கிறேன் நான்!

 

இது காதல் காலம் – 1 பெப்ரவரி 2, 2007

கோப்பு வகை: இது காதல் காலம், என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 8:32 மு.பகல்

சாலை பாதுகாப்பு வாரத்தில்
முதல் கட்டமாக‌
உன் க‌ல்லூரிக்கு முன்னே
‘ஜாக்கிரதை. தேவ‌தை குறுக்கிடும்’
என குறியீடு வைக்க‌ திட்டமிட்டுள்ளதாம் அர‌சு!