கண்டதுமே வந்தனையோ! கண்ணசைவில் வந்தனையோ!
கன்னியவள் நகைத்தஅக் கணத்தில்தான் வந்தனையோ!
கட்டழகில் கிறங்கிப்போய் கருத்தினில் வந்தனையோ!
கள்ளமற்ற கோதையுளம் கவர்ந்ததாலே வந்தனையோ!
காதருகே காரணந்தான் கதைத்திடுவாய் காதலே!