![]() |
விண்மீன்களுக்கு மத்தியில் நிலா; தீபங்களின் நடுவில் நீ! |
|
சன்னிதி வாசல் யாசகர்களாய் திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன விளக்குகள் நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக |
|
![]() |
உன் நினைவெனும் தீபத்தில் விட்டிலாய் விழுந்து விழுந்து முடிகின்றன என் மணித்துளிகள் |
|
புத்தாடையணிந்த பூரிப்பில் நீ உலவும் அழகைக் காணவேனும் நாள்தோறும் வாராதா ஏதேனும் பண்டிகை |
|
